Wednesday, October 10, 2007

நெருப்பில் விழுந்த புழுவாகப் பார்ப்பனர்கள

மதம் என்றால் மக்களின் நம்பிக்கையின் மீது கட்டப்பட்டதாம். நம்பிக்கை என்றால் எதையாவது சும்மா நம்பிக்கொள்ள வேண்டியது; கந்தசாமி சொன்னான், இராமசாமி சொன்னான் என்று எதையாவது நம்பிக்கொள்ளவேண்டியது.

இப்பொழுது ஒருத்தர் ஒரு நம்பிக்கை வைத்திருந்தால் மற்றவர்கள் அதைக் கேள்வி கேட்கக் கூடாதாம். படித்தவர்கள் பலரும் சொல்கிறார்கள். அதுதான் நாகரிகமாம். தினமணி தலையங்கம் எழுதுகிறது. கூட வேலை செய்பவர்கள் என்னிடம் சொல்கிறார்கள்.

ஒருத்தருடைய நம்பிக்கை சமுதாயத்தையோ, வேறு தனி நபருக்கோ எந்தத் தொடர்புமற்ற ஒரு விடயத்தைப் பற்றியதாக இருந்தால், அதை அவர் விரும்பாவிட்டால், கேள்விக்குள்ளாக்குவது தவறு என்றே கொள்ளலாம்.

ஆனால், சமூக முக்கியத்துவம் சார்ந்த பிரச்சினைகளில், ஒருவரோ, பலரோ, தங்களுடைய நம்பிக்கையை மட்டுமே காரணமாகக் கொண்டு, இது இப்படி இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்று கூறும்பொழுது, அந்த நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குவதில் என்ன தவறு?

இன்று மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து, அவர்களின் மனது புண்ணாகிவிடக்கூடாது என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அறிக்கையை அரசு திரும்பப்பெற்றுள்ளது.

சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் எப்படி ஏற்படுகிறது என்று இந்தப் புராணங்களும், இதிகாசங்களும் சொல்லுகின்றன? அவற்றை மறுத்து அரசு பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் அறிவியல் பாடத்தில் வேறு மாதிரியாக சொல்லிக்கொடுக்கிறார்களே? இப்படி மக்களின் நம்பிக்கையை புறக்கணிக்கலாமா? இவற்றை எழுதி வைத்த நமது முன்னோர்கள் மூடர்களா? இந்த அரசாங்கம் இந்தப் பாடத்திட்டங்களையும் திரும்பப்பெறுமா?

இவற்றுக்கெல்லாம் பாடுபடாத சோ, சுப்பிரமணியசாமி & பார்ப்பனக் கூட்டம், இராமனுக்காக குதிப்பது ஏன்? ஏனென்றால், வெள்ளைக்காரன் உருவாக்கிய "இந்து அடையாளத்தை" மக்கள் சுமக்க வேண்டும்; அதை வைத்துப் பார்ப்பனர்கள் அரசியல் பிழைக்க வேண்டும் என்ற ஏற்பாட்டில், மக்களின் முன் பல கடவுளையும் வைத்து அரசியல் செய்வதை விட, இந்து மதத்துக்கென்று பொறுக்கியெடுக்கப்பட்ட ஒரு பொறுக்கிக் கடவுள் மட்டும் இருந்தால் அரசியல் செய்வது எளிது என்பது பார்ப்பனர் திட்டம். இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடவுள்தான் இந்த ஒரே ஒரு பொண்டாட்டியுடன் மட்டும் வாழ்ந்த ஒரே ஒரு கடவுள்.

இப்பொழுது இராமர் பாலப் பிரச்சினையில், கலைஞர் இராமனின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கி விட்டதால், நெருப்பில் விழுந்த புழுவாகப் பார்ப்பனர்கள் துடிக்கிறார்கள். அவர்கள் துடிப்பதில் நியாயம் இருக்கிறது. நம்மாளும் சேர்ந்து துடிக்கிறார்கள். கேட்டால் அவர்கள் "இந்து"க்களாம்.

No comments: